Stock News: இந்திய பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி நீடிப்பது ஏன்?
சர்வதேச சந்தைப் போக்குகளின் எதிரொலியாக, இந்திய பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி நிலவுகிறது. சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் தொடர்ந்து சரிவை சந்தித்துள்ளன. பெரும்பாலான நிறுவனப் பங்குகளும் வீழ்ச்சி கண்டுள்ளன.
சர்வதேச சந்தைப் போக்குகளின் எதிரொலியாக, இந்திய பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி நிலவுகிறது. சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் தொடர்ந்து சரிவை சந்தித்துள்ளன. பெரும்பாலான நிறுவனப் பங்குகளும் வீழ்ச்சி கண்டுள்ளன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (மார்ச் 12) காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 289.83 புள்ளிகள் உயர்ந்து 74,392.15 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 79.5 புள்ளிகள் உயர்ந்து 22,577.40 ஆக இருந்தது.
வர்த்தக தொடக்கத்தில் ஏற்றம் நிலவினாலும், அடுத்த சில மணி நேரங்களில் வீழ்ச்சியை நோக்கிச் சென்றது முதலீட்டாளர்களுக்கு கலக்கத்தை அளித்துள்ளது.
இன்று பிற்பகல் 12.30 மணியளவில் சென்செக்ஸ் 343.41 புள்ளிகள் (0.46%) சரிந்து 73,758.91 ஆகவும், நிஃப்டி 116.95 புள்ளிகள் (0.52%) சரிந்து 22,380.95 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்காவின் அடுத்தடுத்த நடவடிக்கைகளால் வரிவிதிப்பு விவகாரத்தில் சர்வதேச நாடுகளிடையே குழப்பம் நீடித்து வருகிறது. பொருளாதார வீழ்ச்சி அச்சமும் துளிர்விட்டுள்ளது, சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

அமெரிக்க பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியில் நிறைவு பெற்றது. இதேபோல், ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் டோக்கியோ, சியோலில் ஏற்றமும், ஹாங்காங் மற்றும் ஷாங்காயில் சரிவும் நிலவுகிறது. இவற்றின் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்து வருகிறது.
ஏற்றம் காணும் பங்குகள்:
இண்டஸ்இண்ட் பேங்க்
கோடக் மஹிந்திரா பேங்க்
டாடா மோட்டார்ஸ்
ஹெச்டிஎஃப்சி பேங்க்
சன் பார்மா
ஐடிசி
பஜாஜ் ஃபின்சர்வ்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
பாரதி ஏர்டெல்
ஐசிஐசிஐ பேங்க்
டைடன் கம்பெனி
எஸ்பிஐ
நெஸ்லே இந்தியா
எல் அண்ட் டி
டாடா ஸ்டீல்
அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ்
டிசிஎஸ்
ஆக்சிஸ் பேங்க்
டெக் மஹிந்திரா
இன்போசிஸ்
விப்ரோ
பஜாஜ் ஃபைனான்ஸ்
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 1 பைசா குறைந்து ரூ.87.22 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan