Stock News: பரவும் புதிய அச்சம்; இந்திய பங்குச் சந்தையில் தடுமாற்றம்!
அமெரிக்க பொருளாதார வீழ்ச்சி அச்சம் காரணமாக, சர்வதேச அளிவில் பங்குச் சந்தைகளில் வீழ்ச்சி நிலவி வருகிறது. இதன் தாக்கத்தால் இந்திய பங்குச் சந்தையிலும் தடுமாற்றம் நிலவுகிறது.
அமெரிக்க பொருளாதார வீழ்ச்சி அச்சம் காரணமாக, சர்வதேச அளிவில் பங்குச் சந்தைகளில் வீழ்ச்சி நிலவி வருகிறது. இதன் தாக்கத்தால் இந்திய பங்குச் சந்தையிலும் தடுமாற்றம் நிலவுகிறது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (மார்ச் 11) காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 346.23 புள்ளிகள் சரிந்து 73,768.94 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 124.80 புள்ளிகள் சரிந்து 22,335.50 ஆக இருந்தது.
வர்த்தக தொடக்கத்தில் இருந்தே பங்குச் சந்தையில் சரிவு நிலவி வருவது முதலீட்டாளர்களுக்கு கலக்கத்தை அளித்துள்ளது.
இன்று பிற்பகல் 1 மணியளவில் சென்செக்ஸ் 123.02 புள்ளிகள் (0.17%) சரிந்து 73,992.16 ஆகவும், நிஃப்டி 1.85 புள்ளிகள் (0.0082%) சரிந்து 22,458.45 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்காவில் பொருளாதார வீழ்ச்சி அச்சம் துளிர்விட்டுள்ளது சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்க பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியில் நிறைவு பெற்றது. இதேபோல், ஆசிய பங்குச் சந்தைகளான டோக்கியோ, சியோல், ஹாங்காங் மற்றும் ஷாங்காயில் சரிவு நிலவுகிறது. இவற்றின் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்து வருகிறது.

ஏற்றம் காணும் பங்குகள்:
சன் பார்மா
பாரதி ஏர்டெல்
ஐசிஐசிஐ பேங்க்
டைடன் கம்பெனி
ஐடிசி
எஸ்பிஐ
நெஸ்லே இந்தியா
எல் அண்ட் டி
டாடா மோட்டார்ஸ்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
ஹெச்டிஎஃப்சி பேங்க்
டாடா ஸ்டீல்
அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ்
டிசிஎஸ்
ஆக்சிஸ் பேங்க்
டெக் மஹிந்திரா
இன்போசிஸ்
விப்ரோ
பஜாஜ் ஃபைனான்ஸ்
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 38 பைசா குறைந்து ரூ.87.33 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan