Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

க்ளீனர் டு ஐஏஎஸ்..! - யுபிஎஸ்சி தேர்வு எழுதாமலே, உழைப்பால் உயர்ந்த அப்துல் நாசர்!

யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெறவில்லை, ஆனால் ஐஏஎஸ் ஆனார். வீடு வீடாக, செய்தித்தாள்களை போட்டதிலிருந்து தானே ஒரு தலைப்புச் செய்தியாக மாறிய ஐஏஎஸ் அதிகாரி அப்துல் நாசரின் உத்வேகக் கதை இது.

க்ளீனர் டு ஐஏஎஸ்..! - யுபிஎஸ்சி தேர்வு எழுதாமலே, உழைப்பால் உயர்ந்த அப்துல் நாசர்!

Thursday January 23, 2025 , 2 min Read

யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெறவில்லை, ஆனால், ஐஏஎஸ் ஆனார். வீடு வீடாக செய்தித்தாள்களை போட்டதிலிருந்து தானே ஒரு தலைப்புச் செய்தியாக மாறிய ஐஏஎஸ் அதிகாரி அப்துல் நாசரின் உத்வேகக் கதை.

சிலருக்கு வாழ்க்கை எளிதானது, சிலருக்கோ அது சவால்கள் நிறைந்தது. இருப்பினும், இந்த சவால்களை எதிர்கொண்டு, கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு மூலம் வெற்றியை அடையும் நபர்களும் உள்ளனர். அத்தகைய ஒருவர் தான் பி.அப்துல் நாசர். அவரது வாழ்க்கைக் கதை லட்சக்கணக்கான மாணவர்களுக்கு உத்வேகம் அளித்து, வெற்றியை அடைய கடினமாக உழைக்க அவர்களைத் தூண்டுகிறது.

abdul nasar

வாழ்க்கையில் பெரும் கஷ்டங்களை கடந்து இன்று ஒரு வெற்றியாளராக, ஐஏஎஸ் அதிகாரியாக பலருக்கும் ஊக்கமளிக்கிறார். இந்தியாவின் மிகவும் சவாலான போட்டித் தேர்வுகளில் ஒன்றான சிவில் சர்வீஸ் தேர்வு எழுதாமலே ஐஏஎஸ் பதவியை அடைந்தார்.

யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. ஆனால், அவர் ஒரு ஐஏஎஸ் அதிகாரி பதவியை அடைந்தார் என்பது உங்களுக்கு ஆச்சரியமாகத் தோன்றலாம். ஆம், அது உண்மைதான்! இப்போது, ​​உங்கள் மனதில் எழும் அடுத்த கேள்வி 'எப்படி' என்பதுதான்? இந்த சுவாரஸ்யமான மற்றும் ஊக்கமளிக்கும் பயணத்தைப் பற்றி அறிய தொடர்ந்து படிக்கவும்.

Abdul Nasar IAS

யார் இந்த அப்துல் நாசர்?

கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தலச்சேரியில் பிறந்த நாசர், வாழ்க்கையில் பல கஷ்டங்களைச் சந்தித்து வளர்ந்தவர். அவருடைய 5 வயதிலேயே தந்தையை இழந்தார். குடும்பத்தை நிர்வகிக்க அவரது தாய் வீட்டு வேலைக்காரராக வேலை செய்தார். நாசரும் அவரது உடன்பிறந்தவர்களும் வெவ்வேறு அனாதை இல்லத்தில் வளர்ந்தனர். இந்தச் சவால்கள் இருந்தபோதிலும், 13 ஆண்டுகள் அனாதை இல்லத்திலே வளர்ந்து அவரது பள்ளிப் படிப்பை வெற்றிகரமாக முடித்தார்.

இதற்கிடையில், 10 வயதிலிருந்தே, அவரது குடும்பத்திற்காக துப்புரவு பணியாளர் மற்றும் ஹோட்டல் சப்ளையர் என பல வேலைகளை செய்துள்ளார். பின்னர், நாசர் தலச்சேரியில் உள்ள அரசுக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். அவரது வாழ்நாள் முழுவதும், அவரது குடும்பத்தை பராமரிக்க செய்தித்தாள்களை விநியோகித்தல், டியூஷன் எடுத்தல் மற்றும் தொலைபேசி ஆபரேட்டராகப் பணியாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு வேலைகளைச் செய்து வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் சவால்களுடன் கடந்தார்.

1994ம் ஆண்டு, நாசர் அவரது முதுகலைப் பட்டத்தை பெற்ற பிறகு கேரள சுகாதாரத் துறையில் அரசு ஊழியராக அவரது வாழ்க்கையைத் தொடங்கினார். இருப்பினும், பொது சேவையில் அவரது அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியால், அவர் படிப்படியாக பதவி உயர்வுகளைப் பெற்றார். இறுதியில் 2006ம் ஆண்டு மாநில சிவில் சர்வீஸில் துணை ஆட்சியர் பதவியை அடைந்தார்.

2015ம் ஆண்டு, நாசர் கேரளாவின் உயர் துணை ஆட்சியராக அங்கீகாரம் பெற்றார். இதன் விளைவாக, 2017ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார். 2019ம் ஆண்டு கொல்லம் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு கேரள அரசின் வீட்டுவசதி ஆணையராகப் பணியாற்றினார்.

ஐீரோ டூ ஹீரோ ஆன அப்துல் நாசரின் உத்வேகமான வாழ்க்கைப் பயணம் இதேபோன்ற சவால்களை எதிர்கொள்ளும் எண்ணற்ற யுபிஎஸ்சி ஆர்வலர்களுக்கு மனதைத் தொடும் மற்றும் ஊக்கமளிக்கும் கதையாகும்.