Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

Stock News: மீண்டெழுந்து நிற்கும் இந்தியப் பங்குச் சந்தை - காரணம் என்ன?

சர்வதேசப் போக்குகளின் தாக்கங்களைக் கடந்து, உள்ளூர் பாசிட்டிவ் காரணங்களின் எதிரொலியாக இந்தியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மீண்டெழுந்து சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் உயர்ந்துள்ளன.

Stock News: மீண்டெழுந்து நிற்கும் இந்தியப் பங்குச் சந்தை - காரணம் என்ன?

Thursday February 13, 2025 , 2 min Read

சர்வதேசப் போக்குகளின் தாக்கங்களைக் கடந்து, உள்ளூர் பாசிட்டிவ் காரணங்களின் எதிரொலியாக இந்தியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மீண்டெழுந்து சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் உயர்ந்துள்ளன. பெரும்பாலான நிறுவனப் பங்குகளும் ஏற்றம் கண்டுள்ளன.

மும்பை பங்குச் சந்தையில் இன்று (பிப்.13) காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 214.08 புள்ளிகள் உயர்ந்து 76,385.16 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 69.8 புள்ளிகள் உயர்ந்து 23,115.05 ஆக இருந்தது.

கடந்த சில நாட்களாக கடும் வீழ்ச்சியை சந்தித்து வந்த பங்குச் சந்தை தற்போது வெகுவாக மீளத் தொடங்கி பச்சை விளக்குகள் ஒளிர்வது முதலீட்டாளர்கள் மத்தியில் நிம்மதி வெளிச்சத்தைப் பாய்ச்சியுள்ளது.

இன்று முற்பகல் 11.10 மணியளவில் சென்செக்ஸ் 369.91 புள்ளிகள் (0.49%) உயர்ந்து 76,540.99 ஆகவும், நிஃப்டி 123.00 புள்ளிகள் (0.53%) உயர்ந்து 23,168.25 ஆகவும் இருந்தது.

காரணம் என்ன?

அமெரிக்க பங்குச் சந்தை சற்றே இறக்கத்துடன் நிலை கொண்டது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் ஷாங்காயில் மட்டும் இறக்கம் நிலவுகிறது. சியோல், டோக்கியோ மற்றும் ஹாங்காங் பங்குச் சந்தைகள் ஏறுமுகம் கண்டுள்ளன. அமெரிக்க அதிபர் தொடங்கிவைத்த வரிவிதிப்பு யுத்தத்தின் தாக்கம் நீடிக்கிறது. உலக நாடுகளின் கரன்சி மதிப்புகளில் நிலையற்ற தன்மை, பொருளாதார வீழ்ச்சி அபாயம் முதலானவை இந்தியப் பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்து வருகிறது.

sensex

இந்நிலையில், ஜனவரி மாத பணவீக்கம் வெகுவாக குறைந்தது குறித்த அறிக்கை வெளியானது, உள்ளூரில் சிறு முதலீட்டாள்கள் பங்குகளை வாங்குவதில் காட்டி வரும் ஆர்வம் உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகள் மீளத் தொடங்கியுள்ளன. எனினும், சர்வதே போக்குகளைப் பொறுத்து இந்நிலை மாறவும் வாய்ப்புள்ளது என்று வர்த்தக நிபுணர்கள் எச்சரிக்காமல் இல்லை.

ஏற்றம் காணும் பங்குகள்:

பஜாஜ் ஃபைனான்ஸ்

டெக் மஹிந்திரா

ஹிந்துஸ்தான் யூனிலீவர்

எல் அண்ட் டி

சன் பார்மா

பஜாஜ் ஃபின்சர்வ்

ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்

பாரதி ஏர்டெல்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

என்டிபிசி

ஆக்சிஸ் பேங்க்

விப்ரோ

கோடக் மஹிந்திரா பேங்க்

டாடா மோட்டார்ஸ்

ஐசிஐசிஐ பேங்க்

சன் ஃபார்மா

டாடா ஸ்டீல்

இறங்கு முகம் காணும் பங்குகள்:

மாருதி சுசுகி

டிசிஎஸ்

நெஸ்லே இந்தியா

இன்போசிஸ்

ரூபாய் மதிப்பு

இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 16 பைசா உயர்ந்து ரூ.86.81 ஆக இருந்தது.


Edited by Induja Raghunathan