Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

Zoho சி.இ.ஓ. பொறுப்பில் இருந்து ஸ்ரீதர் வேம்பு விலகல்!

1996 முதல் நிறுவனத்தை உருவாக்கிய ஸ்ரீதர் வேம்பு, முதன்மை விஞ்ஞானி எனும் பொறுப்பு வகித்து, ஜோஹோவின் ஆய்வு பணிகளிலும், தன்னடைய தனிப்ப்ட்ட கிராமப்புற வளர்ச்சி நோக்கிலும் கவனம் செலுத்துவார்.

Zoho சி.இ.ஓ. பொறுப்பில் இருந்து ஸ்ரீதர் வேம்பு விலகல்!

Monday January 27, 2025 , 2 min Read

ஜோஹோ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சி.இ.ஓ. ஸ்ரீதர் வேம்பு தன்னுடைய சி.இ.ஓ பதவியில் இருந்து விலகியுள்ளார்.

1996 முதல் நிறுவனத்தை உருவாக்கிய ஸ்ரீதர் வேம்பு, முதன்மை விஞ்ஞானி எனும் பொறுப்பு வகித்து, ஜோஹோவின் ஆய்வு பணிகளிலும், தன்னுடைய தனிப்பட்ட கிராமப்புற வளர்ச்சி நோக்கிலும் கவனம் செலுத்துவார்.

"இன்று புதிய அத்தியாயம் துவங்குகிறது. ஏஐ துறையில் அண்மைக்கால முக்கிய மேம்பாடுகள் உள்ளிட்ட நம்மை எதிர்நோக்கியுள்ள பல்வேறு சவால்கள் மற்றும் வாய்ப்புகளை கருத்தில் கொண்டு, ஆய்வு மற்றும் மேம்பாடு பணிகளிலும், என்னுடைய தனிப்பட்ட கிராமப்புற வளர்ச்சி நோக்கிலும் கவனம் செலுத்துவது ஏற்றதாக இருக்கும்," என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ZOHO
ஜோஹோ நிறுவன சி.இ.ஓ.பொறுப்பில் இருந்து விலகி, ஆழமான ஆய்வுகளில் கவனம் செலுத்த முதன்மை விஞ்ஞானியாக புதிய பொறுப்பை ஏற்க இருக்கிறேன்,” என்று ஸ்ரீதர் வேம்பு எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாற்றத்தை அடுத்து, இணை நிறுவனர் ஷைலேஷ் குமார் தேவே குழும சி.இ.ஓவாக பதவி ஏற்க உள்ளார். இன்னொரு இணை நிறுவனர் டோனி தாமஸ், ஜோஹோவின் அமெரிக்க செயல்பாடுகளை கவனித்துக்கொள்வார். மேனேஜ் இஞ்சின் பிரிவை ராஜேஷ் கணேசன் மற்றும் மணி வேம்பு ஜோஹோ.காம் பிரிவுக்கும் பொறுப்பேற்பார்கள்.

”ஆய்வு மற்றும் மேம்பாடு சவாலை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதை பொருத்தே நம்முடைய நிறுவன எதிர்காலம் இருக்கிறது. புதிய பொறுப்பை ஆற்றலோடும், உற்சாகத்தோடும் எதிர்நோக்கியுள்ளேன். தொழில்நுட்பப் பணிகளுக்கு மீண்டும் திரும்புவது மகிழ்ச்சி அளிக்கிறது,” என்றும் அவர் கூறியுள்ளார்.

1989ல் ஐஐடி மெட்ராசில் பொறியியல் பட்டம் பெற்ற பிறகு ஸ்ரீதர் வேம்பு பிரின்ஸ்டன் பல்கலையில் எம்.எஸ் மற்றும் பிஎச்டி பட்டம் பெற்றார். அமெரிக்காவின் குவால்காமில் பொறியாளராக பணியைத்துவக்கினார்.

1996ல் தனது இரண்டு சகோதரர்களுடன் இணைந்து, வலைப்பின்னல் கருவி நிறுவனங்களுக்கு சேவை அளிக்கும் மென்பொருள் நிறுவனம் அட்வெண்ட்நெட்டை துவக்கினார். 2009ல் நிறுவனம் ஜோஹோ கார்ப் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, சிஆர்.எம் சேவைகளுக்கான சாஸ் சேவையில் கவனம் செலுத்த துவங்கியது.

2024ல் அவர் 5.85 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன், இந்தியாவின் 39 பணக்காரராக ஃபோர்ப்ஸ் பத்திரிகையால் பட்டியலிடப்பட்டார். 2021ல் அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியத்திற்கு நியமனம் செய்யப்பட்டார்.

ஜோஹோ 2023ம் நிதியாண்டில் 1 பில்லியன் டாலர் விற்பனையை கடந்து, ரூ.8,703 கோடி செயல்பாட்டு வருவாய் ஈட்டியது. முந்தைய ஆண்டு இது ரூ.6,710 கோடியாக இருந்தது.

2023, மார்ச்சில், மற்ற வருமானம் உள்ளிட்ட நிறுவன மொத்த வருமானம் ரூ.9,158 கோடியாகும். நிகர லாபம் ரூ.2,386 கோடி.

6,00,000 வர்த்தகங்கள் பரப்பில் 90 மில்லியனுக்கும் மேல் பயனாளிகளை கொண்டுள்ள ஜோஹோ 2014 க்கு பிறகு இந்திய சந்தையில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. தில்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் அலுவலகம் கொண்டுள்ளது. டிசிஎஸ், ஹெக்ஸாவேர், டெக் மகிந்திரா, இன்போசிஸ், விப்ரோ உள்ளிட்டவை முக்கிய வாடிக்கையாளர்களாக உள்ளனர்.


Edited by Induja Raghunathan